Wednesday, 20 December 2017

உன் நினைவிற்கு ஒரு மடல்



தூரக் கிழக்கில் வெளிப்படும் 
சூரிய ஒளிக்கற்றை என் 
கன்னங்களை வருடுவதை போல் 
தூர தேசத்தி லிருந்து வீசும் 
அவள் பாசம்.... 

உன் நினைவுகளில் நிமிடமுள் 
உருண்டு தேய்ந்தாலும் - ஓய்வின்றி 
நான் மட்டும் ஓடுகிறேன் உன் 
நினைவை சுமந்து... 

பனித்துளியில் பின்னிய 
பனிமாலை போல் - அவள் 
அகப் பனியில் உறைந்தது 
அகம்... 

என் குருதியில் கலந்திட்ட 
மதுவைப் போல் - என் நிலை 
மறந்து உன் நினைவுடன் திரிகிறேன்... 

நீரின் மேற்பரப்பில் விழும் 
ஒளிக்கற்றை பிரதிபலிப்பின் 
ஜுவாலை போல் - உன் 
நினைவின் பிரதிபலிப்பு என் 
இதயத்தை ஜுவாலை யாக்கியது... 

தாமரை இதழ் தேடும் 
சூரிய ஒளி போல் 
மனம் மதுரமான 
உன்னை தேடுகிறது ..... 

- மூ.முத்துச்செல்வி

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...