தூரக் கிழக்கில் வெளிப்படும்
சூரிய ஒளிக்கற்றை என்
கன்னங்களை வருடுவதை போல்
தூர தேசத்தி லிருந்து வீசும்
அவள் பாசம்....
உன் நினைவுகளில் நிமிடமுள்
உருண்டு தேய்ந்தாலும் - ஓய்வின்றி
நான் மட்டும் ஓடுகிறேன் உன்
நினைவை சுமந்து...
பனித்துளியில் பின்னிய
பனிமாலை போல் - அவள்
அகப் பனியில் உறைந்தது
அகம்...
என் குருதியில் கலந்திட்ட
மதுவைப் போல் - என் நிலை
மறந்து உன் நினைவுடன் திரிகிறேன்...
நீரின் மேற்பரப்பில் விழும்
ஒளிக்கற்றை பிரதிபலிப்பின்
ஜுவாலை போல் - உன்
நினைவின் பிரதிபலிப்பு என்
இதயத்தை ஜுவாலை யாக்கியது...
தாமரை இதழ் தேடும்
சூரிய ஒளி போல்
மனம் மதுரமான
உன்னை தேடுகிறது .....
- மூ.முத்துச்செல்வி
சூரிய ஒளிக்கற்றை என்
கன்னங்களை வருடுவதை போல்
தூர தேசத்தி லிருந்து வீசும்
அவள் பாசம்....
உன் நினைவுகளில் நிமிடமுள்
உருண்டு தேய்ந்தாலும் - ஓய்வின்றி
நான் மட்டும் ஓடுகிறேன் உன்
நினைவை சுமந்து...
பனித்துளியில் பின்னிய
பனிமாலை போல் - அவள்
அகப் பனியில் உறைந்தது
அகம்...
என் குருதியில் கலந்திட்ட
மதுவைப் போல் - என் நிலை
மறந்து உன் நினைவுடன் திரிகிறேன்...
நீரின் மேற்பரப்பில் விழும்
ஒளிக்கற்றை பிரதிபலிப்பின்
ஜுவாலை போல் - உன்
நினைவின் பிரதிபலிப்பு என்
இதயத்தை ஜுவாலை யாக்கியது...
தாமரை இதழ் தேடும்
சூரிய ஒளி போல்
மனம் மதுரமான
உன்னை தேடுகிறது .....
- மூ.முத்துச்செல்வி
No comments:
Post a Comment