Monday, 13 August 2018

கடவுள் தேசம்












மும்மாரி மழைப்பொழிவு
முகப்பொலிவு கொண்டு
இயற்கை கொஞ்சிக்கிடக்கும்
மலை கீதம் மாணிக்கமாய்
மழலை மொழியும் இனிமை
ஆதவன் ஆருடம் செய்திடும்
அருவி அழகி அழகிட
உண்மையில்
கடவுள் தேசம்தான்

மழைவெள்ளம் வந்தும்
ரசித்த மக்கள்
வெள்ளமும் மகிழ்ந்தாள்...

வீழ்ந்துகிடக்கும் இயற்கை
சிலர் செயலால்
இடுக்கி அன்னை
இட்ட கட்டளை - மனித ஆசை
இஷ்டங்கள் எல்லாம்
இயற்கை தன்வசமாக்கியது..

இயற்கையன்னை
ஆழ்ந்து உரைக்கிறாள்
இது என்னுடையது என்று!
எங்களை மன்னித்துவிடு
பிறப்பின் அருமை
புரியாதவர்கள் நாங்கள்!
உன்னை காக்க மறந்தோம்!

- மூ.முத்துச்செல்வி 

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...