Monday, 13 August 2018

தமிழே நீ

அருள் தந்து
மருள் தந்து
இருள் தந்து போனாய்
என்னுள் பொருள் தந்து போனாய்

சந்தம் தந்து
நயம் தந்து
பாடல் தந்து போனாய்
என்னுள் சுகம் தந்து போனாய்

பிழை தந்து
மாற்றம் தந்து
மாயை தந்து போனாய்
என்னுள் நிலை தந்து போனாய்

தொடக்கம் தந்து
முடிவு தந்து
தியாகம் தந்து போனாய்
என்னுள் தொடர்கதையாய் போனாய்

- மூ.முத்துச்செல்வி 

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...