Saturday, 11 August 2018

உன்னால் முடியும்!

உன்னால் முடியும்!
ஆம் நம்மால் முடியும் 
துணிவு கொள்!
துணிச்சல் உன்னிடம் சரணடையும் 
உன் பாதை 
உன் பாதங்களால் மட்டுமே!
உன் கையெழுத்து - ஒருநாள் 
பிறரின் கையேடாக மாறும்!
பொறுமை கொள் 
விதை போல் 
வெற்றி கொள் 
மரம் போல்!
முடியும் நம்பு!
முடிவுகூட நீ வரைவாய்!
போராட்டம் கொள் 
போர்க்களங்கள் கூட 
பூக்களமாகும்!
உன் எண்ணம் 
உன் செயல் 
உருவாகட்டும் புதிய பாதையை!

- மூ.முத்துச்செல்வி  

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...