Saturday, 11 August 2018

உன்னால் முடியும்!

உன்னால் முடியும்!
ஆம் நம்மால் முடியும் 
துணிவு கொள்!
துணிச்சல் உன்னிடம் சரணடையும் 
உன் பாதை 
உன் பாதங்களால் மட்டுமே!
உன் கையெழுத்து - ஒருநாள் 
பிறரின் கையேடாக மாறும்!
பொறுமை கொள் 
விதை போல் 
வெற்றி கொள் 
மரம் போல்!
முடியும் நம்பு!
முடிவுகூட நீ வரைவாய்!
போராட்டம் கொள் 
போர்க்களங்கள் கூட 
பூக்களமாகும்!
உன் எண்ணம் 
உன் செயல் 
உருவாகட்டும் புதிய பாதையை!

- மூ.முத்துச்செல்வி  

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...