Thursday, 16 August 2018

மழைஅரசி !

மழைஅரசி !
இவள் கொண்ட கோபம் 
மானிடன் இவன் செய்த பாவம் 
மன்னித்துவிடு!
மக்கள் நாங்கள் 
மகிழ்ச்சி பெற வழிவிடு!
இருக்கும் இடத்தை விட்டு 
இல்லாதவர்க்கு அருள்புரிவாய்!
எங்கள் குறைகேட்டு 
மழைஅரசியே மன்னித்துவிடு!
உன்னை வேண்டாம் 
என்று சொல்லவில்லை 
வேறுஒருநாள் வா என்கிறோம்!
இன்று சென்றுவிடு!
உன் ஆதங்கம் போகட்டும் 
ஆனந்தம் கொண்டு சென்றுவா!
ஆறுதல் நாங்கள் அடைய 
அடைக்கலம் தா!
இந்த வளம் நீ தந்தது 
இந்த செழுமை நீ தந்தது 
நீயே இதை அழிக்கலாமா?
மூடர்கள் எங்களை வாழ்த்தி 
முக்கடலில் சங்கமித்துவிடு 
அன்னையே!

-மூ.முத்துச்செல்வி 

Tuesday, 14 August 2018

கேள்வியான சுதந்திரம்


யாருக்கு வேண்டும் இந்த சுதந்திர தினம்?
யாரிடமும் இல்லை சுதந்திரம்
சுதந்திரம் யாரிடம் உள்ளது
பெண்கொடுமை, வன்கொடுமை
இதிலுள்ள சுதந்திரம்
ஆடம்பரத்திற்கு பிறர்
ஆடைகள் களவுகொள்வதில் சுதந்திரம்
திரையில் இரட்டை வசனத்தில்
சுதந்திரம் -வளரும் தலையும்
உச்சரிப்பதில் சுதந்திரம்
போலிகள் பின் செல்லும்
அரசியலில் சுதந்திரம்
இறைவன் என்ற பெயரில்
இம்சைகளுக்கு சுதந்திரம்
பொருளாதார பதாளத்திற்கு
சுதந்திரம்.
மக்கள் வெள்ளத்தில்
தவிக்கும் போது
இங்கு சுதந்திர தினமும் வேண்டுமோ!
தியாகிகளின் நினைவுதான்
சுதந்திர தினம்
மறுக்கவில்லை
ஆனால் இங்கு
நாங்களே திராணியின்றி இருக்கிறோமே

-மூ.முத்துச்செல்வி

Monday, 13 August 2018

ஹைக்கூ

நேரம் நீள்கிறது 
கானம் படபடக்கிறது 
மெல்லிய புன்னகையால்!

- மூ.முத்துச்செல்வி  

கடவுள் தேசம்












மும்மாரி மழைப்பொழிவு
முகப்பொலிவு கொண்டு
இயற்கை கொஞ்சிக்கிடக்கும்
மலை கீதம் மாணிக்கமாய்
மழலை மொழியும் இனிமை
ஆதவன் ஆருடம் செய்திடும்
அருவி அழகி அழகிட
உண்மையில்
கடவுள் தேசம்தான்

மழைவெள்ளம் வந்தும்
ரசித்த மக்கள்
வெள்ளமும் மகிழ்ந்தாள்...

வீழ்ந்துகிடக்கும் இயற்கை
சிலர் செயலால்
இடுக்கி அன்னை
இட்ட கட்டளை - மனித ஆசை
இஷ்டங்கள் எல்லாம்
இயற்கை தன்வசமாக்கியது..

இயற்கையன்னை
ஆழ்ந்து உரைக்கிறாள்
இது என்னுடையது என்று!
எங்களை மன்னித்துவிடு
பிறப்பின் அருமை
புரியாதவர்கள் நாங்கள்!
உன்னை காக்க மறந்தோம்!

- மூ.முத்துச்செல்வி 

தமிழே நீ

அருள் தந்து
மருள் தந்து
இருள் தந்து போனாய்
என்னுள் பொருள் தந்து போனாய்

சந்தம் தந்து
நயம் தந்து
பாடல் தந்து போனாய்
என்னுள் சுகம் தந்து போனாய்

பிழை தந்து
மாற்றம் தந்து
மாயை தந்து போனாய்
என்னுள் நிலை தந்து போனாய்

தொடக்கம் தந்து
முடிவு தந்து
தியாகம் தந்து போனாய்
என்னுள் தொடர்கதையாய் போனாய்

- மூ.முத்துச்செல்வி 

Saturday, 11 August 2018

உன்னால் முடியும்!

உன்னால் முடியும்!
ஆம் நம்மால் முடியும் 
துணிவு கொள்!
துணிச்சல் உன்னிடம் சரணடையும் 
உன் பாதை 
உன் பாதங்களால் மட்டுமே!
உன் கையெழுத்து - ஒருநாள் 
பிறரின் கையேடாக மாறும்!
பொறுமை கொள் 
விதை போல் 
வெற்றி கொள் 
மரம் போல்!
முடியும் நம்பு!
முடிவுகூட நீ வரைவாய்!
போராட்டம் கொள் 
போர்க்களங்கள் கூட 
பூக்களமாகும்!
உன் எண்ணம் 
உன் செயல் 
உருவாகட்டும் புதிய பாதையை!

- மூ.முத்துச்செல்வி  

Friday, 10 August 2018

தமிழே நீ வாழ்க!

பேரருள் ஊட்டிய கானத்தினால்
பேதை எனைபாட வைத்தாய்யோ?

சிந்திய சலனம் செழிக்கும் முன்னே
சிந்திய சலனம் செழிக்கும் முன்னே
சிந்தையில் வந்தெனை ஆட்கொண்டாயோ?

மந்திய மனங்கள்
மயங்கும் முன்னே
மதியில் வந்து சேர்ந்தாயோ?

பாற்கடல் பயில - உன்
பாதம் பணித்தேன்!

- மூ.முத்துச்செல்வி

Tuesday, 7 August 2018

தலைவா


உங்கள் இலக்கணம் தனி
உங்கள்
இலக்கியம் தனி
நாடக தமிழும் தனி
கர்ஜிக்கும் குரல்
அதில் விழும் வார்த்தைகள்
ஆர்ப்பரிக்கும் தமிழ்
ஆளுமை கொஞ்சும் வரிகள்
ஐக்கியம் ஆன மொழி
கவிதை எழுதும் போதே
ஏனோ உங்களுக்காக
வழிகிறது
சிறு துளி கண்ணீர்.
உங்கள் தமிழ்
உச்சரிக்கும்
உங்கள் புகழ்.

- மூ.முத்துச்செல்வி

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...