Saturday, 21 April 2018

காதலே வந்துவிடு!!!

காதலே!
கடவுச்சொல்லாய் 
மாறினாய் 
என் இதயக்கூட்டில் 
களவுபோனாய்!

கூடு உடைந்த 
பட்டாம்பூச்சியாய் திரிகிறேன் 
உன்னைத் தேடி 

நகக்கண்ணில் வேதனை 
மனக்கண்ணில் உன் பிம்பம் 
பிரிந்தது போதும் 

மூச்சிக்காற்றை மொத்தம் 
தொலைத்தேன் 
நச்சுப்புகையில் 
வாழ்கிறேன்.

காதலே 
வந்துவிடு 
இல்லை என்னை 
கொன்றுவிடு!

- மூ.முத்துச்செல்வி 

Thursday, 19 April 2018

காதல்

அன்பின் உருவே
ஆசைக் கனியே
இன்னல் துடைத்து
ஈகை அருள்வாய்
உன்னுள் பாதி
ஊடல் கொள்ள
என்னுள் மீதி
ஏற்றம் கொள்ள - விரல்
ஐந்தும் பின்ன
ஒன்றிய எண்ணங்கள்
ஓதிடும் நம் காதலை
ஒளடதம் தந்தாய் 
அஃதே வியந்தேன் 

- மூ.முத்துச்செல்வி 

Thursday, 5 April 2018

காவேரியே! கேள்

தனிநாடு வேண்டாம்
தலைநாடாக மாறுவோம்!
தாங்கும் கீழ்நாடு என்று 
உதைக்கிறார்களோ!
நாம் இல்லையேல் 
நாடும் ஊனமே!
அடிமை என்று நினைத்தால் 
உதிரம் உதிர்த்து 
விண்ணிற்கு உரைப்போம் 
எங்கள் வீரத்தை 
மழலை என்று 
ஏளனம் செய்தால் 
மாவீரர்களாக மாறுவோம்
உழவன் என்று மிதித்தால் 
தலைநிமிர்ந்து சொல்வோம் 
உனக்கும் உணவளிப்பவர் 
நாங்கள் என்று!
காவேரியே! கேள் 
உன் சகோதரிகளைக் காத்து 
இயற்கை செழிப்புடன் 
வரவேற்போம் உன்னை!

- மூ.முத்துச்செல்வி 

பிழை ஒன்று

மெய் என்று
நினைத்தேன்
பொய் என்று
மாறியது...
பிழை ஒன்று
நான் செய்தேன்
பழி என்றானது
நல்லவை எல்லாம்
கெட்டவையானது..
நான் வைத்த
பாசங்கள் எல்லாம்
வேஷங்களானது..
எத்துணை செய்தேன்
நன்மைகள்
போற்றவில்லை
ஒரு தவறு செய்தேன்
குற்றம் சொல்கிறது
ஆயிரம் முறை....

Sunday, 1 April 2018

ஆசைப்படு!


தோல்வியின் போது 
வெற்றியின் மீது ஆசைப்படு!
வெற்றியின் போது 
பணிவின் மீது ஆசைப்படு!
பணிவின் போது 
சுயமரியாதை மீது ஆசைப்படு!
சுயமரியாதையின் போது 
பிறர் மரியாதை மீது ஆசைப்படு!
பிறர் மரியாதையின் போது 
அன்பின் மீது ஆசைப்படு!
அன்பின் போது 
உயிர்களின் மீது ஆசைப்படு!
உயிர்களின் போது 
பரிவின் மீது ஆசைப்படு!
பரிவின் போது 
இயற்கையின் மீது ஆசைப்படு!
இயற்கையின் போது 
செடிகளின் மீது ஆசைப்படு!
செடிகளின் போது 
வேர்கள் மீது ஆசைப்படு!
வேர்களின் போது 
தண்ணீர் மீது ஆசைப்படு!
தண்ணீரின் போது 
தாகத்தின் மீது ஆசைப்படு!
தாகத்தின் போது 
விவசாயத்தின் மீது ஆசைப்படு!

- மூ.முத்துச்செல்வி 

இயற்கையும் கல்வியும்

பூஞ்சோலை தோட்டத்து
ஊஞ்சலில் உலா வரும்
நெல் மணிகளுக்கிடையே
ஆரம்பமாகிறது தொடக்கக்கல்வி

ஏர்பூட்டும் கைகள்
ஆகாசத் தோழன்
அழகுற பின்னிய நட்பு
அறிவூட்டும் அதிசயக்கல்வி

ஓதங்களில் அசையும்
பாய்மர ஓடங்களில்
பல்லக்கில் செல்லும்
பசுமைக்கல்வி

இயற்கை அன்னை
இயற்றிய அழகிய நூல்
இயற்கையோடு இனைந்த
இனியக்கல்வி

தேடி தேடி திரியும் கால்கள்
சேற்றில் படரும் கைகள்
நீரோடை வண்ணத்தில்
முழுமையடையும் கல்வி

-

பணி நிறைவு

ஓடிய வலிகள் போதும்
ஒய்வெடுத்துக் கொள்!
கதை சொல்லி வளர்த்தாய்
இனி வரும் காலம்
எம் மகளோ! மகனோ!
கதை சொல்லும் குழந்தை
நீ தான்!
உன் புகழ் பாடும்
இம்மண்ணில்
உன் குழந்தைகள் நாங்கள்
வாழ்த்த வரவில்லை!
வாழ்த்து பெற வந்தோம்!

-மூ.முத்துச்செல்வி

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...