Wednesday, 14 February 2018

உன் தாள் பணிகிறேன்


சிலம்பின் வீரத்தில் 
வீர மேகலை 
தூவிய வீரம்!! 

கம்பன் கட்டுத்தறிக்கும் 
கவி பாடச் செய்தவள்! 

மேல்,கீழ் கணக்குகளில் 
அறம், புறம் ஓதியவள்! 
உயிர்நெறி ஊட்டியவள்! 

பாரதி புதுமை 
தாசன் எழுச்சி 
ஒருசேரப் பெற்றவள்! 

ஈரடிக் குறளில் 
வாழ்க்கைநெறி 
போதித்தவள்! 

அன்புக்கு தனி 
அகராதி சேர்த்தவள்! 

என்னையும் கவி பாடச் 
செய்த அன்னையே 
உன் தாள் பணிகிறேன்! 

- மூ.முத்துச்செல்வி

1 comment:

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...