Friday, 24 July 2020

மனசாட்சி

மெல்ல நீ பேசுவாய்
மௌனத்தில் நான் இருப்பேன்

கவலைகள் உன்னிடம் நான் சொல்ல
காதோரம் நீ பேசுவாய்

மகிழ்ச்சியின் முதல் ரசிகை
நீ தான்
அதில் நான் நிலைத்திருக்க
செய்பவளும் நீ தான்...

தோழி போல் உடன் வருவாய்
உன் வருகை இன்றி
நான் சென்றதில்லை எங்கும்..

பல விடயங்கள் உன்னிடம் மட்டும்
பதில் நமக்குள் மட்டும்
பல விஷயங்கள் நீ அறிவாய்
பாலம் போல் நீ இருந்தாய்...

நீ எந்தன் மனசுக்குள்
மனசாட்சியே!

- முத்து துரை சூர்யா

No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...