Thursday, 16 July 2020

நீ போகயிலே


கண்டாங்கி சேலை கட்டி
கண்ணே நீ போகயிலே
முந்தானை முன்
மண்டியிட்டதடி மனம்...
பட்டு சேலை கட்டி
பரபரப்பாய் நீ போகயிலே
கொசுவத்தில் மனம் பிண்ணிக்கொண்டதடி...
பருத்தி சேலை கட்டி
பக்குவமாய் நீ போகயிலே
பால் நிலா போல்
மனம் பருவம் கொண்டதடி...
தாவணி கட்டி
தாளம் போட்டு  நீ போகயிலே!
தளர்ந்ததடி மனம்...

- முத்து துரை சூர்யா


No comments:

Post a Comment

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...