Monday, 23 July 2018

ஹைக்கூ

சலசலக்கும் இதயத்தில் 
துடிதுடிக்கும் 
அவள் நினைவுகள் .....

- மூ.முத்துச்செல்வி

யாரை நம்ப!?

தோழன் என்று 
நினைத்தேன் 
தோளில் வலிமை 
இழந்தேன் 
காதலன் என்று 
நினைத்தேன
கேளிக்கைச் 
செய்தான் 
முதியவன் என்று 
நினைத்தேன் 
முந்தானை 
கேட்கிறான் 
தந்தை என்று 
நினைத்தேன் 
தன்மானம்
இழந்தேன் 
கயவன் என்று நினைத்தால் 
நான் வாழும் பூமியே 
நரகம் என்றானது  
பெண் என்றேன் 
வேடிக்கைச் செய்தான்  
யாரை தான் நம்புவது 
பெண் கடவுள்களை 
காணும் தேசத்தில் 
வேலி என்று கிடைத்தான் 
நம்பினேன் 
ஆனால் 
துரோகியே அவன் தான் 
யாரை நம்ப!?.

- மூ.முத்துச்செல்வி 


Tuesday, 17 July 2018

காதலுடன் காற்று

குழல் கொஞ்சும் 
காற்றில் 
குயிலுடன் ஒரு பயணம் 

நம் காதலால் 
காற்றுக்கும் பொறாமையோ 
ஆடி பேரிரைச்சல்

தென்றல் தாளத்தில் 
காற்றாய் 
உன் காதல் வருட 

மேகங்கள் பிணைக்கும் 
காற்றை போல் 
நம் காதலும் பிணையட்டும் 

காற்றுக்கு நன்றி உரைப்பேன் 
நம் காதலை 
உலகுக்கு உரைப்பதால் 

-மூ.முத்துச்செல்வி  


Monday, 16 July 2018

உன் நினைவு


மரிக்கின்ற வேளை 
உன் நினைவை 
மறைக்க வேண்டும் 

உதிர்கின்ற வேளை 
உன் நிழலில் 
உதிரம் சிந்த வேண்டும் 

ஏக்கம் கொள்ளும் வேளை 
உன் எண்ணங்களை 
ஏந்திட வேண்டும் 

யாமம் வருடும் வேளை 
உன் நினைவுகளுடன் 
யாகம் சேர்ந்திட வேண்டும் 

காதல் வந்திடும் வேளை 
உன் நினைவுடன் 
காலம் போக்கிட வேண்டும்

தனிமை இருக்கும் வேளை 
உன் கனவுகளுடன் 
 துயில் கொள்ள வேண்டும்

நீரற்ற மீன்கள் போல் 
உன் நினைவில்
நாளும் துடித்திட வேண்டும் 

-மூ.முத்துச்செல்வி  

இயற்கையன்னை


வீறுகொண்ட மாமேனி
செந்நிற மேனியில்
வீற்றிருக்க
வீர மகள்
நாளும் போற்ற
வையம் போற்ற
வாழ்த்திடுமே உன் புகழை 

நானிலம் நீ 
நீரும் நீ 
வானும் நீ 
கண்ணீர் துளியும் நீயே!
கதிரவன் காதலியே 
நிலவொளி தலைவியே 
நீலநிற மேனியாலே!
பண்ணும் நீ 
என் 
பாட்டும் நீயே!

பாடும் கானம் 
எல்லாம் 
உன்  தாள் பணிய 
அன்னை உருவே 
எங்கள் உயிரே 
மன்னிப்பாயாக!

- மூ.முத்துச்செல்வி 


Wednesday, 4 July 2018

நீ!

சொப்பணங்கள் பல கண்டும்
நான் காணாத சொப்பணம்
நீ!
திசைகள் பல தேடியும்
நான் போகாத திசை
நீ!

- மூ.முத்துச்செல்வி 

பாவி நான்

பகலவன் புகழ்ந்தான்
புகலவன் நான் கொண்டேன்
படைத்தவன் பித்தானான்
பாமரன் நான் வித்தானேன்
ஓதியவர் எல்லாம் ஓய்ந்திட 
ஓடமாய் நான் நின்றேன் 
பூக்கள் எல்லாம் காய்ந்திட 
புழுக்களுக்கு உரமானேன் 
வண்ண மேனியால் 
என்னை கேக்கிறாள் 
வாடி நான் நின்றேன் 
அழுக்குக்களின் புகலிடம்  
அனைத்திற்கும் முதல் இடம் நான் 
காடு மேடு எல்லாம் 
கஞ்சியுடன் நான் உழைத்தேன் 
ஆதரவுடன் நான் வருட 
பாவி அவள் என்னை நம்பினாள் 
என் செய்ய 
என் விவசாயமே!

-மூ.முத்துச்செல்வி  

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...