Tuesday, 27 February 2018

எங்கே மனிதம்


உன் இனவெறிக்கு
பழி நாங்கள்
உன் போட்டிக்கு
எங்கள் உயிர் பந்தயங்களா?
பள்ளி சுமை சுமந்த 
முதுகுகள் 
வெடிகுண்டுகளின்
துளைகளை சுமக்கிறதே!

இறைவா!
குழந்தைகளைக் கொல்லும்
இம்மனிதர்களை
உன்னுடன் எடுத்துக்கொள்
எங்கள் கண்ணீரை
துடைக்க கரம் நீட்டு!

வளங்களை அடைய
வளரும் தலைமுறை
வாழ்வை சிதைப்பது
சரியோ!

மிருகங்கள் இரக்கம்கூட
இல்லா மனிதனிடம்
மனிதத்தை தேடுவது
பிழையோ!

- மூ.முத்துச்செல்வி




Wednesday, 21 February 2018

எங்கே தேடுவது மனிதத்தை இங்கே!


வியர்வை துளியில் இரத்தம்
உறிய துடிக்கும்
கூட்டம்....

போராட்டம் பல செய்தும்
பார்க்காத நாட்காட்டி

தோலுரித்த எலும்புகளாய்
அழையவிட துடிக்கும்
பேராசை பணங்கள்

சுவாசிக்கும் காற்றில் கூட
இல்லை
ஒரு துளி அமிர்தம்.

உப்பு காற்றில்
சிலிர்க்கும் தோலுக்கு
கோடியில் விஷம் ஏறிய
ஆலைகள்.

எங்கே தேடுவது
மனிதத்தை இங்கே!

- மூ.முத்துச்செல்வி



Saturday, 17 February 2018

பூமிதனில் எல்லாம் பொய்யாகுக!


காவேரி! காவேரி!
களிகொண்ட கானங்கள்
பொய்யாகுக!

ஆவணங்கள், ஆளுமை 
அரசுகள், அரசியல் 
எல்லாம் பொய்யாகுக!

ஊழல், லஞ்சம்
கொடுத்த கைகள்
வாங்கிய கைகள் 
பொய்யாகுக!

இலவசம்! இலவசம்!
போலி ஆட்சிக்கு 
வழி கொடுத்த மக்களும்
பொய்யாகுக!

காடே பொய்யாகுக!
நாடே பொய்யாகுக!
விளைநிலமே பொய்யாகுக!
மழையே பொய்யாகுக! 

வஞ்சிக்கப்படட விவசாயமே 
நீயும் பொய்யாகுக!
நானும் பொய்யாகுக!
பூமிதனில் எல்லாம் பொய்யாகுக!

- மூ.முத்துச்செல்வி 

நிறுத்துங்கள்



கானம் பாடி மகிழும் 
குயில்களே! உங்கள் 
பாடலை நிறுத்துங்கள் 
எம் விவசாயி அழுகிறான்... 

வருடும் காற்றே! 
தென்றலை நிறுத்துங்கள் 
எம் விவசாயி கண்ணீரிலாவது 
விதை முளைக்கட்டும்... 

சுடும் சூரியனே! 
சுடுவதை நிறுத்துங்கள் 
எம் விவசாயி கண்ணீர் 
சேமிக்கப்படடும்... 

எமை படைத்த இறையே! 
உம் படைப்பை நிறுத்துங்கள் 
உணவளிக்க விவசாயி 
இங்கில்லை... 

- மூ.முத்துச்செல்வி

Wednesday, 14 February 2018

உன் தாள் பணிகிறேன்


சிலம்பின் வீரத்தில் 
வீர மேகலை 
தூவிய வீரம்!! 

கம்பன் கட்டுத்தறிக்கும் 
கவி பாடச் செய்தவள்! 

மேல்,கீழ் கணக்குகளில் 
அறம், புறம் ஓதியவள்! 
உயிர்நெறி ஊட்டியவள்! 

பாரதி புதுமை 
தாசன் எழுச்சி 
ஒருசேரப் பெற்றவள்! 

ஈரடிக் குறளில் 
வாழ்க்கைநெறி 
போதித்தவள்! 

அன்புக்கு தனி 
அகராதி சேர்த்தவள்! 

என்னையும் கவி பாடச் 
செய்த அன்னையே 
உன் தாள் பணிகிறேன்! 

- மூ.முத்துச்செல்வி

அழகு மௌனங்கள்



அசைபோடும் ஞாபகம் 
அதில் அசைந்தாடும் 
மௌனங்கள்! 

அழும் போது 
உடன் வரும் 
மௌனங்கள்! 

தலைவன் பிரிவில் 
தலைவி சிந்திடும் 
மௌனங்கள்! 

தலைவனைக் கண்டதும் 
தலைவி நாணத்தில் வீசும் 
மௌனங்கள்! 

காதலை சொல்லும் 
காதலர்கள் உதிர்க்கும் 
மௌனங்கள்! 

ஏக்கத்திலும், பாசத்திலும் 
கோவத்திலும், நாணத்திலும் 
ஊடலிலும், பிரிவிலும் 
சிரிப்பிலும், சோகத்திலும் 
உடன் பயணிக்கும் 
மௌனமும் ஓர் அழகுதான்! 

- மூ.முத்துச்செல்வி

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...