Thursday, 29 May 2025

உருக்கேடு!.

எத்துணை எத்துணை ஏமாற்றம்  
என்னில்
எத்துணை எத்துணை ஏமாற்றம்  



பெண்ணே ஓ பெண்ணே!






என்னில் கரைந்து 
தன்னில் மறைத்து
இன்பம் கெடுத்து
சிரிகின்றாய்!


இன்பம் கொடுத்து
இதயம் வளர்த்து
இளமையை தான் 
இழுகின்றாய்!



பெண்ணே ஓ பெண்ணே!



வஞ்சகம் வளர்த்து 
வஞ்சகம் வளர்த்து 
வாழ்வை தானே 
வதைகின்றாய்!




பெண்ணே ஓ பெண்ணே!





காதல் வளர்த்து
கவிதை வரைந்து
கானம் கசந்து
கிடக்கின்றாய்



எத்துணை எத்துணை ஏமாற்றம்  


பெண்ணே ஓ பெண்ணே!



உன்னில் சிதைந்து
தன்மம் மறைந்து
தன்னை மறந்து
சிதைகின்றேன்.




வன்மம் வளர்ந்து 
வன்மம் வளர்ந்து 
என்னை அழிக்க 
நினைகின்றேன்.......






பெண்ணே ஓ பெண்ணே!

எத்துணை எத்துணை ஏமாற்றம்  
என்னில்
எத்துணை எத்துணை ஏமாற்றம்  




- முத்து துரை




Monday, 26 May 2025

மாயை!

மாயையே! மாயையே! 

எல்லாம் மாயையே!


ஞானியாய் ஞானியாய்

ஆன பின் 

எல்லாம் மாயையே!



மயங்கினேன் நானுமே!

விழுந்தேனே நானுமே!

மாயையில்! மாயையில்!



ஓஹோ ஹோ!


ஆசைகள் அலைமோதியே!

ஆரவரம் செய்ததே!!

ஆதிக்கம் வந்ததே!

எல்லாம் மாயையே!



மாயையே! மாயையே! 

எல்லாம் மாயையே!


கனவுகள் பல வந்து 

கலவரம் பல கண்டு 

கண்ணீர்கள் பல சிந்தி

எல்லாம் மாயையே!  யே!......


பிறந்த பலன் புரியாமல்

வளர்ந்த பயன் அறியாமல் 

முதிர்ந்த பின் 

எல்லாம் மாயையே யே!........


மாயையே! மாயையே! 

எல்லாம் மாயையே!


ஞானியாய் ஞானியாய்

ஆன பின் 

எல்லாம் மாயையே!


- முத்து துரை






Friday, 23 May 2025

ஈசன்.

ஈசனே! 

எந்தன் நேசனே!


ஈசனே!  நேசனே!



நீர் குடம்!!!

நீர் குடம்!!!

நீந்தி நீந்தி....


ஆயிரம் ஓர் ஆயிரம் 

வீரர்கள் வென்று


பிண்டம் மென் பிண்டம் நுழைந்து 

தவமாய் கடும் தவமாய் 

உருவம் கொண்டு வந்தேன் 

இவ்வுலகம் வந்தேன்......


ஏந்திய தாயின் மீதிலே!....

எட்டி  எட்டி மிதித்தேன் தீதிலே!...


ஏட்டு கல்வி தான் படித்தேன் 

எட்டு திசையும் அலைந்தேன்!


எல்லாம் நானே! 

என்று மதிக்கா நானே!


ஈசனே! 

எந்தன் நேசனே!


என் குடம் உடையும் நேரம்

மண் குடமாய் போகும் நேரம்

என்னம்மெல்லாம் கண்டேன் உன்னை

எத்துனை எத்துனை தவறுகள் செய்தேன் 

எத்துணை எத்துனை வலிகள் கொடுத்தேன்


நித்திரையில் உன்னை அடைந்தேன்

இறுதி 

நித்திரையில் உன்னை அடைந்தேன்.....


ஈசனே! ஈசனே!

எந்தன் நேசனே!


நேரிலே எந்தன் நேரிலே!

வாழ்விலே எந்தன் வாழ்விலே!

நீதானே என்றும் நீதானே!



நானுமே நானுமே!

கர்வம் கலைந்ததே!

நீயுமே! நீயுமே!



ஈசனே! 

எந்தன் நேசனே!


ஈசனே! 

எந்தன் நேசனே!


நேசனே!

ஈசனே! 

எந்தன் நேசனே!


- முத்து துரை












சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...