Tuesday, 31 December 2019

நீ நான்

நான் நீ என்று இருந்தோம்
இனி நாம் என்று ஆனோம்...

வருசம் ஓடியும்
முதல் நாள் தந்த காதல் மாறவில்லை...

பரவசம் இல்லா மனதில்
பரிசுத்தமாய் நிறைந்த காதல்..

என்றும் உன்னில் நான்
என்னில் நீ
நம்மில் நம் காதல்...

வாழ்த்துக்களுடன்
- முத்து துரை

புத்தாண்டு

கண்ணதாசன் வரிகளாய்
கம்பன் காவியமாய்
வள்ளுவன் நெறிகளாய்
அவ்வை மொழிகளாய்
பாரதியின் வீரமாய்
அன்னையின் பாசமாய்
தந்தையின் வழிகளாய்
குழந்தையின் மழலையாய்
இயற்கையின் கொடையாய்
வளங்களின் வாழ்த்துகளாய்
இறையின் இனிமையாய்
வளரடும் விரியடும்
இனிய புத்தாண்டு

-  முத்து துரை

Saturday, 28 December 2019

பிரிவில் வாடினேன்
நினைவில் தேடினேன்
தனிமையில் திரிந்தேன்
தரணியில் அழைந்தேன்
உலகம் மறந்தேன்
உறவை நினைத்தேன்
நிழலை தேடினேன்
நிலவை அடைந்தேன்
உன்னை நினைத்தேன்
என்னை மறந்தேன்...

- முத்து துரை


சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...