Thursday, 7 February 2019

நீ

ஊடல் ஊறும் வேளை
கூடல் தந்தாய்
கூடலில் நான் திளைத்திருக்க
மனகடலில் மகிழ்ச்சி தந்தாய்
என் எண்ணங்கள் முழுவதும்
நீ இருக்க
வண்ணங்கள் நிறைந்தது வாழ்க்கை
ஆதி நீ
அந்தமும் நீயே!
என் முடிவும் நீயே!
தோல் சாய்ந்திடும் நேரம்
தோல்விகள் இல்லை - உன்னுடன்
துயில் கொள்ளும் நேரம்
துன்பம் இல்லை.
தோழன் என நீ இருந்தால்
தோள்களின் வலிமையை நான் அறிவேன்
வழித்துணையாக நீ இருந்தால்
வழிகளின் சுவடுகள் நான் அறிவேன்
இயற்கையென நீ இருந்தால்
இன்பம் பல நான் அறிவேன்
உதயம் என நீ இருந்தால்
உருகும் உயிர் என நான் இருப்பேன்.
அணைத்துமாக நீ இருந்தால்
கணவனே உன் கரம் பற்றி
காலமெல்லாம் காதலிப்பேன்
உன் மடி சாய்ந்து..

- மூ.முத்துச்செல்வி


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...