Thursday, 7 February 2019

என் ஆசை

உன் மூச்சுக்காற்று
தென்றல் ஸ்பரிசத்தில்
வாழ்ந்திட ஆசை...

உன் கண்களில்
அழகிய பிம்பமாய்
இருந்திட ஆசை...

உன் நெற்றி
வியர்வையில் துளிகளாய்
விழுந்திட ஆசை...

உன் உதடின்
கொஞ்சிடும் முத்தங்களாய்
சிந்திட ஆசை...

உன் இதய துடிப்பில்
என் பெயர்
துடித்திட ஆசை...

உன் பாதங்கள்
படைக்கும் பாதைகள்
நானாக ஆசை...

- மூ.முத்துச்செல்வி


No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...