Tuesday, 5 January 2021

யார் நான்

 

யார் நான் ?
மனிதனா இல்லை மிருகமா?
எதற்கு வந்தேன் இங்கே?
ஏன் இந்த வாழ்வு வாழ்கிறேன்?
யாருக்கு உழைக்கிறேன் 
ஏன் இப்படி உருகுகிறேன்?
ஆள பிறந்தேனா?
அடிமையாக பிறந்தேனா?
வாழ பிறந்தேனா?
வாழ்விக்க பிறந்தேனா?
பாவத்தின் பயனா?
புண்ணியத்தின் விருச்சமா?
அழிக்க வந்தேனா?
உருவாக்க வந்தேனா?
பண்பால் சிறந்தேனா?
சினதால் நிலைத்தேனா?
குணத்தை கற்பித்தேனா?
குற்றத்தை செய்தேனா?
அறிவில் உயர்ந்தேனா?
அறிவற்று கிடந்தேனா?
பகிர்வில் வாழ்வேனா?
பாசத்தை துறந்தேனா?
யார் நான் ?
யார் நான்?
கேள்விகளை சுமந்த
சாதாரண மனிதனா?

- முத்துதுரைசூர்யா


தோழியா? காதலியா?

 

பெண்ணே!
தோழியாய் உன்னை காணும்போது
கண்களில் கண்ணீர் வந்தது இல்லை
காதலியாய் பார்க்கும்போது
கண்ணில் வேதனை வருவது ஏனோ?

தோழியாய் நீ நின்றபோது
மனதில் உறுதி வந்தது
காதலியாய் ஆன பிறகு
காதலின் வலி தெரிகிறது...

தோழியாய் நீ இருந்தாய்
மனம் தூறல் போல் இருந்தது
காதலியாய் நீ மாறினாய்
காமத்தின் பிடியில் மனம் ஊசலாடுகிறது...

தோழி உன் விரல் கோர்க்கும்போது
கடுக்களவு கூட காமம் வந்ததில்லை
காதலி உன் விரல் தீண்டும் போது
ஏதோ உள்ளுகுள் ஒரு ஆனந்தம்...

சொல் பெண்ணே!
நீ எனக்கு தோழியா? காதலியா?

- முத்துதுரைசூர்யா


மழைத்துளி

 

மண்ணில் கருவுற்று
மேகத்தில் உருமாறி
மண்ணில் சேர்ந்தது
தாயிடம் பிறந்து
தந்தையிடம் தவம் செய்து
தாயிடமே வந்தது!

குளிர் சாரல்
வெப்பத்தின் தேடல்
இதமாக இதயம்
உருவாக நீ
உருமாற நான்
உள்வாங்க உன் துளிகள்!

- முத்துதுரைசூர்யா


சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...