Tuesday, 25 June 2024

அழகா!ஆபத்தா!

அழகென்று நினைத்தால் 

அற்புதமாக தெரிகிறாள்..

அழிவென்று நினைத்தால்

அரணென்று இருக்கிறாள்...

அசட்டுடன் நெருங்கினால்

அசராமல் வதைக்கிறாள்... 

அழுகின்ற பொழுது 

ஆறுதல் தருகிறாள்..

அடைக்கலம் தேடும் போது 

அன்னையென மாறுகிறாள்..

அடிக்கும் போது 

அமைதி காக்கிறாள்...

அரவணைப்பாய் என்றால்

அசுரன் ஆகிறாள்..

அழகா ?

ஆபத்தா?

எல்லாம் அனுகுபவர் கைகளிலோ..

என் இனிய இயற்கையே!


- முத்து துரை 

No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...