Tuesday, 25 June 2024

அழகா!ஆபத்தா!

அழகென்று நினைத்தால் 

அற்புதமாக தெரிகிறாள்..

அழிவென்று நினைத்தால்

அரணென்று இருக்கிறாள்...

அசட்டுடன் நெருங்கினால்

அசராமல் வதைக்கிறாள்... 

அழுகின்ற பொழுது 

ஆறுதல் தருகிறாள்..

அடைக்கலம் தேடும் போது 

அன்னையென மாறுகிறாள்..

அடிக்கும் போது 

அமைதி காக்கிறாள்...

அரவணைப்பாய் என்றால்

அசுரன் ஆகிறாள்..

அழகா ?

ஆபத்தா?

எல்லாம் அனுகுபவர் கைகளிலோ..

என் இனிய இயற்கையே!


- முத்து துரை 

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...