Wednesday, 2 February 2022

ஏமாற்றம்

எதில் இல்லை ஏமாற்றம்?

பார்க்கும் பசுமையில் 

ஆர்ப்பரிக்கும் அலையில்

விழுந்துகிடக்கும் மணலில்

வீரமிடும் நடையில்

தோள் தேடும் தனிமையில்

கதிரவனின் காலையில்

நிலவின் இரவில்

நிழலின் தேடலில்

கனிந்த காதலில்

களவாடிய விழிகளில்

ஏமாற்றம் எனக்கொன்றும் புதிதில்லை

இருந்தும் மனம் வலிக்கிறது 

அவனிடம் ஏமாறுகயில்...


- முத்து துரை



No comments:

Post a Comment

தலைகோத வந்தாய்

தலை கோத வந்தாய் நான் தடுமாறி நின்றேன் ஓஹோ! முள்ளின் மீது பனிகள் விழுந்து மோதுகின்றதே பனியின் காதல் முள்ளின் காதில் கேட்கவில்லையோ? பாறை மீது ...