Friday, 12 June 2020


பெண் சிசுவென நீ பிறந்தாய்
பொறுமையுடன் வளர் என்றது...

பருவம் வந்தாய்
பக்குவதுடன் இரு என்றது...

இளம் பருவம் வந்தாய்
இமை மூடாமல் கவனி என்றது...

வேலை தேடி அழைந்தாய்
பெண்பிள்ளைக்கு வேலை எதற்கு என்றது...

கல்யாணம் முடித்தாய்
கணவனுக்கு பணிய சொன்னது...

அன்னை நிலை வந்தாய்
அனைவரையும் புரிந்து நடக்க சொன்னது..

கிழ பருவம் அடைந்தாய்
கிழவிக்கு வேலை இல்லை என்றது...

ஆண் சமூகத்தில்
பெண் பேதை
நடிகன் வீரன்
நடிகை போதை
ஆண் விதைத்த விதையை
பெண் நினைத்து சுமக்க
வலிகள் முழுவதும் பெண்ணிற்கு
ஆண்டவா ஏன் இந்த படைப்பு?

ஆணை வேலி என்றால்
ஏன்
பெண்ணை பயிராய் படைத்தாய்
பெண்ணை விழுது தாங்கிய ஆலமரம் என்று கூறினால்
பயிர் போல் எளிதில் பறித்திட தோன்றாது
விழுதுகளை விழ்த்திட முடியாது!...

- முத்து துரை

Thursday, 4 June 2020

உணரவில்லை நான்





பசியுடன் வந்தேன் மனிதா
பழத்தில் வெடி வைத்தாய்
பாசமுடன் தந்தாய் நினைத்தேன்
பகையுடன் தந்தாய் என்று உணரவில்லை
கடவுளுக்கு படைத்த அமுதென்று நினைத்தேன்
என்னை கல்லறைக்கு அனுப்பும் விஷம் என்று உணரவில்லை!
கருவில் இருந்த குழந்தைக்கு தெரியவில்லை
மண்ணில் வரும் முன் மண்ணிற்குள் செல்வான் என்று

- முத்து துரை சூர்யா

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...