கனவினிலும் நினைவினிலும்
உறவினிலும்
நீதானம்மா
காணிக்கை நான் கொடுத்தேன்
காரணம் அறியேன்
கனவிலும் நீதானம்மா - உன்
கருவினில் வந்தேன்னம்மா - என்
கல்லறை வரை நீதான் அம்மா...
நீ சுமக்க காரணம் கேட்டதில்லை
நான் சுமக்க காரணம் கேட்கிறேன்
உனக்கு நான் பாரமில்லை
எனக்கு மட்டும் நீ பாரமாய் போனாய்...
நீ கொடுத்த உயிர் - இன்று
உன்னையே காவு வாங்குகிறது..
ஏன் தந்தாய்
ஏன் இன்னும் தருகிறாய்
ஏன் இப்படி
ஏன் ஏன் ஏன்....
- முத்து துரை