அவளுக்கென்று ஒரு மனம்
நிலவை போன்று தனிமையான மனம்
கரைவதும் வளர்வதும் தன்னுளே!
அவளுக்கென்று ஒரு மனம்
பகிர்ந்திட ஆயிரம் வாசகம் இருந்தும்
கேட்டிட காதுகள் இல்லா உள் குமுறும் மனம்!
அவளுக்கென்று ஒரு மனம்
அழகிய பூக்கள் போல்
அழகிய நினைவுகள் சுமந்த மனம்!
அவளுக்கென்று ஒரு மனம்
அன்பிற்காக ஏங்கும் மனம்...
- முத்து துரை சூர்யா