Wednesday, 2 June 2021

அவளுக்கென்று ஒரு மனம்

அவளுக்கென்று ஒரு மனம்

நிலவை போன்று தனிமையான மனம்

கரைவதும் வளர்வதும் தன்னுளே!


அவளுக்கென்று ஒரு மனம்

பகிர்ந்திட ஆயிரம் வாசகம் இருந்தும்

கேட்டிட காதுகள் இல்லா உள் குமுறும் மனம்!


அவளுக்கென்று ஒரு மனம்

அழகிய பூக்கள் போல்

அழகிய நினைவுகள் சுமந்த மனம்!


அவளுக்கென்று ஒரு மனம்

அன்பிற்காக ஏங்கும் மனம்...


- முத்து துரை சூர்யா

சாலையோரம்.

சாலையோரம்  மழைதுளியின் ஈரம் ஈரம் மானே! மானே!  உன் முகங்கள் தானே! தேனே! தேனே!  திகட்டாத தேனே! தேனே! ஓஹோ!.. அருகில் உந்தன் முகமே! தொலைவில் சென...