பாலில் கலந்த தேன் போல்
தித்திப்புடன் காதலை சொன்னேன்...
நீரில் கலந்த தேனாய்
சுவையற்று போக சொன்னாய்...
மணம் வீசும் பல மலர்களை
தேடி உன் முன் வந்தேன்...
வாசனை இல்லா
காகித பூவாய் மாறிட சொன்னாய்...
கதிரவன் செல்லும் இடமெல்லாம்
தலை அசைக்கும் தாமரையை போல இருந்தேன்...
நீர்குமிழ் சுமந்த அல்லி இதழாய்
இருக்க சொன்னாய்....
பற்றுடன் உன் கரம் பிடித்தேன்
பற்று வேண்டாம் போ என்றாய்...
மனதில் காதல் இல்லாமலா
என் மீது பாசம் வைத்தாய்..
பற்று இல்லாமலா காதல் கொண்டாய்...
உன் காதல் நான் அறிவேன்
என் காதல் நீ அறிவாய்...
காதலுடன் நான்...
- முத்துதுரை
தித்திப்புடன் காதலை சொன்னேன்...
நீரில் கலந்த தேனாய்
சுவையற்று போக சொன்னாய்...
மணம் வீசும் பல மலர்களை
தேடி உன் முன் வந்தேன்...
வாசனை இல்லா
காகித பூவாய் மாறிட சொன்னாய்...
கதிரவன் செல்லும் இடமெல்லாம்
தலை அசைக்கும் தாமரையை போல இருந்தேன்...
நீர்குமிழ் சுமந்த அல்லி இதழாய்
இருக்க சொன்னாய்....
பற்றுடன் உன் கரம் பிடித்தேன்
பற்று வேண்டாம் போ என்றாய்...
மனதில் காதல் இல்லாமலா
என் மீது பாசம் வைத்தாய்..
பற்று இல்லாமலா காதல் கொண்டாய்...
உன் காதல் நான் அறிவேன்
என் காதல் நீ அறிவாய்...
காதலுடன் நான்...
- முத்துதுரை