பறவையென பறந்தேன்
பாற்கடல் அளந்தேன்
இன்று
அவன் கால் கடலில் -என்
அலை அமைதியடைகிறது....
போர்க்களம் போல இருந்த மனம்
உன்னால் உன் அன்பால்
அலைந்திடும் மேகங்களுக்கு பின்
அமைதியாய் நிற்கும் வானமானது...
தென்றலென வந்தாய்
இதயஙகளின் மெல்லிய வாசனையை
உணர செய்தாய்...
காதலனே!
காதோடு உரைத்து போ
உன் காதலை
காத்திருக்கிறது என் உயிர்...
- முத்து துரை
பாற்கடல் அளந்தேன்
இன்று
அவன் கால் கடலில் -என்
அலை அமைதியடைகிறது....
போர்க்களம் போல இருந்த மனம்
உன்னால் உன் அன்பால்
அலைந்திடும் மேகங்களுக்கு பின்
அமைதியாய் நிற்கும் வானமானது...
தென்றலென வந்தாய்
இதயஙகளின் மெல்லிய வாசனையை
உணர செய்தாய்...
காதலனே!
காதோடு உரைத்து போ
உன் காதலை
காத்திருக்கிறது என் உயிர்...
- முத்து துரை